க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, May 30th, 2022

யிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெவளியிடப்படும் திகதி குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார்.

அதன்படி பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பிரயோக பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக கம்பிகள், ஆளிகள் மற்றும் மின்குமிழ்கள் போன்றவற்றை கொள்வனவு செய்ய பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நாட்களில் நடத்தப்பட்டு வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பரீட்சையில் ஒருவருக்கு பதிலாக மற்றுமொருவர் பரீட்சையில் தோற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையும், 16 ஆம் திகதிமுதல் உயர்தரப் பரீட்சையையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் - இராஜாங்க அமைச்சர்...
தமிழகத்தை புரட்டிப்போட்ட மிக்ஜாங் புயல் - மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாததால் தொற்றுநோய்கள் ...
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள நடவடிக்க...