சக்கரங்கள் கழன்று பேருந்து விபத்து!

Thursday, June 30th, 2016

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 9.30 அளவில் புத்தளம் அனுராதபுரம் வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் இதில் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பேருந்தில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறு...
டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படின் வழக்கு - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!