கொழும்பை வந்தடைந்தன சயுர மற்றும் சுர நிமல!
Sunday, October 30th, 2016
பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்தியா கொச்சி துறைமுகத்துக்கு சென்றிருந்த இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை நேற்று கொழும்பு துறைமுகத்தை மீண்டும் வந்தடைந்துள்ளன.
இந்தக் கப்பல்களின் தலைவர்களான பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான ஆகியோர் குறித்த கப்பல்களுடன் விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன் இந்திய தெற்கு கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜெயந்தி நட்கார்னியையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த கப்பல்கள் இரண்டும் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!
நுகர்வோர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் - மின்சார ச...
ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு - இந்தியா - பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்த 15 ம...
|
|