கொடிகாமம் சந்தையில் கழிவு வீதம் அறவிடுவதற்கு தடை!

Tuesday, April 12th, 2016
சந்­தை­களில் அற­வி­டப்­படும் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்யும்போது கழிவு நட­வ­டிக்­கை­க­ளினால்  அதி­க­ள­வி­லான நட்­டத்தை அடை­கின்­றனர்.
இந்­நி­லையில் 10% கழிவை வழங்­கு­மாறு விவ­சா­யி­களை கட்டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது என சாவ­கச்­சேரி பிர­தேச சபை செய­லாளர் அ. வினோராஜ் அறிவித்­துள்ளார்.
கொடி­காமம் சந்­தையில் விற்பனைக்கு கொண்­டு­வரும் உற்­பத்திப் பொருட்­க­ளுக்கு சந்தை வியா­பா­ரி­களால் 10% கழிவு அற­வி­டப்­ப­டு­வ­தனை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான கலந்துரை­யாடல் பிர­தேச சபை மண்­ட­பத்தில் அண்­மையில் இடம்­பெற்ற­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
சந்­தை­களில் விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து பொருட்­களை கொள்­வ­னவு செய்­யும்­போது 10% இற்கு ஒன்று என்ற வீதத்தில் கழி­வு­பெ­றப்­ப­டுதல் தவிர்க்­கப்­ப­டுதல் வேண்டும். விவசாயிகளைக் கட்­டா­யப்­ப­டுத்தி கழி-வைப் பெற்­றுக்­கொள்­வதைத் தவிர்க்கவேண்டும் என சந்தை வியாபா-ரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: