கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது தாக்குதல்
Saturday, May 14th, 2016அளவெட்டி கூட்டுறவுச் சங்கக் கடைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (12-05-2016) இரவு கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பிரசன்னா (வயது -21) என்ற இளைஞனே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.2
இச்சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் எனவும் , தாக்கியவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
நாளாந்தம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பேஸ்புக் பாவனையாளர்கள் சாவு!
மிகை ஊழியர் என்று பாராது அதிபர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - பாதிக்கப்பட்ட அதிபர்கள் கோரிக்கை!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
|
|