கூட்டுறவுத்துறை பிரச்சனைகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு!
Monday, February 26th, 2018கூட்டுறவுத்துறை மூலமும், பிரச்சனைகளை எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் தீர்த்து வைப்பதாக அமைச்சர் ரிஷாத் பதியூத்தீன் உறுதியளித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையின் முன்னணி அமைப்புகளுடன் தமது அமைச்சில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கூட்டுறவுத்துறையுடன் சம்பந்தப்பட்ட 14 அமைப்புக்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.
கூட்டுறவுத்துறையின் உற்பத்திகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும் அதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறைக்கென தகவல் தொடர்பாடல் வலயமைப்பொன்றையும், ஆராய்ச்சி மத்திய நிலையம் ஒன்றையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
இலங்கையின் காலநிலையில் கடுமையான மாற்றங்கள்!
110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது !
பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க ந...
|
|