மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – இளைஞன் பலி!
Tuesday, April 26th, 2022யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இளவாளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
000
Related posts:
நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் இன்று கூடுகிறது!
அரச பேருந்துகளுக்கும் இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம் - நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறி...
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது - ...
|
|