குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள் – இன்றுமுதல் சதொச விற்பனையகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Sunday, December 12th, 2021

பொய்யான அறிக்கைகளை விடுத்து அரசியல் ரீதியாக அரைகுறையாக இருக்க முடியாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  

அத்துடன் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்றுமுதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை, 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசிய பொருட்களை இன்றுமுதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 99 ரூபா 50 சதத்திற்கும், சிறந்த சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபா அளவிலும் சதொச வர்த்தக நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

எந்தவொரு அரிசி வகையையும், சதொசயில் தலா 5 கிலோகிராம் அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும், நூடில்ஸ் ஒரு பைக்கற்று 125 ரூபாவுக்கும், சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை, சந்தையில் நிலவும் விலையை விடவும், குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: