குடாநாட்டை சுற்றிவரும் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் படை!

Saturday, April 30th, 2016

குற்றச்செயல்­களை தடுப்­ப­தற்­காக யாழில் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட மோட்டார் வண்டி குழு­வினர் சட்­ட­வி­ரோத நடவடிக்கையில் ஈடு­பட்ட 30க்கும் அதி­க­மா­னோரை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர்.

அத்­துடன் தொடர்ச்­சி­யாக இக் ­கு­ழு­வினர் இரவு பகல் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். அண்மைக் கால­மாக யாழ். குடாவில் வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­த­னை­ய­டுத்து யாழ் மாவட்ட செய­ல­கத்தில் கடந்த செவ்வாய்க்கி­ழமை அர­சாங்க அதிபர் நா.வேத­நாதன் தலை­மையில் நடை­பெற்ற சிவில் பாது­காப்பு கூட்டம் நடை­பெற்­றது.

இதன்போது வட மாகாண பொலிஸ் மா அதிபர் பெரேரா உட்­பட முக்­கிய பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். கடந்த காலங்­களில் இறுக்­க­மான கலா­சார கட்­டுப்­பா­டு­க­ளும்­ ந­ட­வ­டிக்­கை­யி­னாலும் யாழ்ப்­பாணம் எவ்­ வித பிரச்­சி­னை­களும் இன்றி தலை நிமிர்ந்து காணப்­பட்­டது.

இப்­போது கலா­சார சீர­ழி­வு­களும் குற்றச் செயல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. எனவே தான் இக் குற்றச் செயல்­களைத் தடுப்­பது பொலி­ஸாரின் கட­மை­யாகும் என அங்கு கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்­டன

Related posts:


தெரிவுக்குழுவின் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்ச...
அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...