கிளிநொச்சியில் பொதுச்சுகாதார பரிசோதகர் பற்றாக்குறை!
Tuesday, June 12th, 2018கிளிநொச்சி மாவட்டத்தில் 23ஆயிரம் மக்களுக்கு ஒரு பொதுச்சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வாழ்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணாயிரம் பேருக்கு ஒரு பொது சுகாதாரப்பரிசோதகர் என்ற அடிப்படையில் சேவையாற்ற வேண்டும். ஆனால் 23ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் கடமையாற்றி வருகின்றனர்.
அத்துடன் ஏனைய மருத்துவத்துறைகளிலும் பெரும் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங...
சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் - உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர்...
|
|