கிளிநொச்சிக்கு ஆளுநர் விஜயம், மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடல்

Wednesday, April 6th, 2016

நேற்று(5)  செவ்வாய் கிழமை கிளநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் ஒன்றை மேற்க்கொண்டிருந்தார்.

மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார்.

இதன்போது மாவட்டத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், கல்வி, நீர்ப்பாசனம்,விவசாயம்,கால்நடை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  குறித்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் புள்ளிவிபர விளக்கம் அளித்தனை தொடர்ந்து வட மாகாண ஆளுநர் வருகை தந்திருந்த திணைக்களங்களின் தலைவர்களிடம் துறைசாந்து விளக்கங்களையும் கேட்டுக்கொண்டார்.

பிற்பகல்  நான்கு மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் அணைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Related posts: