காலாவதியான பொருட்களை விற்பனை செய்த எட்டு வர்த்தகர்களுக்குத் தண்டம் !
Thursday, March 2nd, 2017மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதி வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை விற்பனை செய்த எட்டு வர்த்தகர்கள் கண்டறியப்பட்டனர்.
இவ்வாறான குற்றச் சாட்டின் பேரில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எட்டு வர்த்தகர்களுக்கும் 11 ஆயிரத்து 500 ரூபா நீதவானால் தண்டம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Related posts:
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தாக்கம் செலுத்தும் யாழ்ப்பாணம்!
தனியார் வகுப்புக்களை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுகாதார அமைச்சு!
இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை - இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!
|
|