கடத்தலில் ஈடுபட்ட ஏழு இலங்கைப் பெண்கள் கைது!
Tuesday, August 9th, 2016சட்டவிரோத தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெங்கலூர் விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இவற்றின் பெறுமதி 65 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிகம் எனவும், பெங்களூர் விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்கள் இந்தியாவின் சென்னை நகரை மையப்படுத்தி தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும், சர்வதேச தங்கக் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Related posts:
வீடு புகுந்து ஒருவருக்குத் தலையில் வெட்டு - கொடிகாமத்தில் நேற்று இரவு பயங்கரம்!
யாழில் கடந்த 3 மாதங்களில் மூவாயிரம் கிலோ கஞ்சா மீட்பு!
தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி - மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!
|
|