கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
Friday, November 3rd, 2017
தொழில்நுட்பக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் பணிப்பாளர், தொழில்நுட்பவியல் கல்லூரி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு 24.11.2017 இற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். விண்ணப்பங்களையும் மேலதிக விபரங்களையும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில்வழிகாட்டல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். (தொ.இல:0212212403)
பின்வரும் துறைகள் சார்ந்த 35 வகையான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கட்டடம் மற்றும் நிர்மாணத்துறைக் கற்கைகள், அலுவலக வர்த்தக மற்றும் மொழிக்கற்கைநெறிகள், மின் இலத்திரனியல் கற்கை நெறிகள், தன்னியக்க ஓட்டோமொபைல் கற்கைநெறிகள், தகவல் தொடர்பாடல் மற்றும் கணனிக் கற்கைநெறிகள் என பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
மின்கம்பத்துடன் மோதி பிரதேச செயலாளரின் வாகனம் விபத்து!
ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் - அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்...
சில அரச நிறுவனங்களால் நாட்டுக்கு ஒரு இலட்சம் கோடி இழப்பு - மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சித்தகவல்!
|
|
|


