மின்கம்பத்துடன் மோதி பிரதேச செயலாளரின் வாகனம் விபத்து!
Friday, January 25th, 2019காங்கேசன்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக உள்ள மின்கம்பத்துடன் பிரதேச செயலாளரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காரைநகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகனத்திற்கு முன்பாக நாய் ஓடியதால் சாரதி வாகனத்தை வீதிக்கு அடுத்த பக்கம் திருப்பியுள்ளார்.
இதன் போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக இருந்த மணல் சறுக்குண்டு வாகனம் மின்கம்பத்துடன் மோதியதில் வாகத்தின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்தது.
இதில் வாகனத்தில் பயணித்த பிரதேச செயலாளர் மற்றும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் - இராஜாங்க அமை...
விரைவில் பலாலி சர்வதேச விமான நிலையம் சேவையை தொடரும் - சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!
|
|