மல்லாகம் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் கைது!
Monday, February 20th, 2017
மல்லாகம் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் நீதிமன்ற கட்டளையை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சிறு குற்றச் செயல்கள், மோதல் சம்பவம் மற்றும் தாபரிப்பு வழக்குகளுடன் தொடர்புபட்ட இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது
கடந்த வழக்கு தவணைகளுக்கு ஆஜராகத் தவறிய மேற்படி ஜவருக்கு எதிராக நீதிமன்றினால் தெல்லிப்பழை பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த நபர்கள் வெவ்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
|
|