கப்பலுடன் மோதி படகு விபத்து – மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை கிரிந்த கடற்பரப்பில் கப்பலொன்றுடன் மீன்பிடிப்படகொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் படகில் இருந்த 5 மீனவர்களும் மற்றுமொரு மீன்பிடிப் படகின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘சதவ் -1’ என்ற படகு விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவர்கள் ‘மதுஷ 2’ என்ற மீன்பிடி படகு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகம் நோக்கி அழைத்து வரப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மீண்டும் வரும்போது நல்ல முடிவுடன் வருவேன் - முன்னாள் ஜனாதிபதி !
இலங்கையில் இதுவரையில் 185,118 PCR பரிசோதனைகள் நிறைவு - கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய ...
முன்னாள் இராயாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும அகால மரணம் - மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்த மூவின ...
|
|