கடலாமை இறைச்சி , முட்டைகளை வைத்திருந்த ஐவர் கைது!

Tuesday, February 7th, 2017

கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் என்பவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த 5 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 6.5 கிலோகிராம் கடலாமை இறைச்சி மற்றும் 2.5 கிலோகிராம் கடலாமை முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை பூநகரி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Hawksbill turtle (Eretmochelys imbricata), Red Sea, Egypt

Related posts: