கடமைக்கு திரும்பாதுள்ள படை யைவிட்டு விலகிய  42,000  பேரையும் உடன் கைது செய்ய நடவடிக்கை!

Tuesday, January 17th, 2017

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், பொது மன்னிப்புக் காலத்தில் சாரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான அதிகாரம்,  காவல்துறையிடமும், குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 42,500 இராணுவ வீரர்கள் பொது மன்னிப்புக் காலத்தில் இராணுவத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் சரணையடையாது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

sri-lanka-marks

Related posts: