கடத்தப்பட்ட வர்த்தகரின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
Friday, October 14th, 2016
கிளிநொச்சி நகரில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ள இளம் வர்த்தகர் ரதீஸின் மனைவி சர்மிளா ரதீஸ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டம், இடைக்குறிச்சி, வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகரான ரதீஸ்(35) நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.குறித்த வர்த்தகர் தனது வீட்டிலிருந்து அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போதே இடையில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டார்
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர் தொடர்பான விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த வர்த்தகரின் மனைவி நேற்று மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளார்.
Related posts:
சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்!
வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை – துறைசார் தரப்பினரிடம் ஜனாத...
ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் - பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!
|
|