அட்டைகள் பற்றாக்குறை – சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்!

Saturday, May 21st, 2022

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பங்களும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களும் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் அட்டைகள் ஒஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய வங்கியில் அந்நியச் செலாவணி இல்லாததால் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் பல மாதங்களாக முடங்கியுள்ளது.

இருப்பினும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு 
வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவி...
சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம் - ய...