இனி பலாலியிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணிக்கலாம்!

Wednesday, February 20th, 2019

ஏ320, ஏ321 வானூர்திகள் தரையிறங்கக் கூடிய வகையில் பலாலி வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 3 ஆயிரத்து 500 மீற்றராக விரிவாக்கப்படும்.

இதன்மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி வானூர்திச் சேவைகளை இங்கிருந்து நடத்த முடியும்.

ஓடுபாதை அபிவிருத்தியை முன்னுரிமை கொடுத்து முதற்கட்டமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கட்டடங்களை தற்காலிகமாக புறப்படுகை மற்றும் வருகை முனையங்களாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர முனைய கட்டடங்களை இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணியின் போது கட்ட முடியும் என்றும் முதலில் வானூர்தி நிலையம் கணிசமான வானூர்திப் போக்குவரத்தை ஈர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வானூர்தி நிலையத்துக்கான மின்சாரம், குடிநீர் வசதிகள், வீதி, எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கிலுள்ள மக்களுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்றும் வணிக மற்றும் தொழில் வாய்ப்புக்கள் கிட்டும் என்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் சிவில் வானூர்திப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts: