பிரதமர் தலைமையில் நடைபெற்ற மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

Thursday, December 2nd, 2021

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் தாயாரான மல்லிகா ஹேவாவிதாரனவின் எண்ணக்கருவிற்கமைய மல்லிகா இல்லச் சங்கம் 1920 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிப்பதே இதன் நோக்காகும்.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மல்லிகா ஹேவாவிதாரன அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதன்போது நினைவு முத்திரையொன்றும் முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியாரிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மல்லிகா இல்லச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐவருக்கு கௌரவ பிரதமரினால் நூற்றாண்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரிய, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, மல்லிகா இல்லச் சங்கத்தின் தலைவர் தமயந்தி டி அல்விஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட மல்லிகா இல்லச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

000

Related posts: