கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனு நிராகரிப்பு!
Wednesday, June 15th, 2016கஞ்சா கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இளவாலையில் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று(14) நிராகரித்துத் தீர்ப்பு வழங்கினார்.
வவுனியாவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த- 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்-31 ஆம் திகதி இளவாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்துச் சந்தேகநபர்கள் இருவரும் தமக்குப் பிணை வழங்கக் கோரி யாழ். மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த பிணை மனுவை நேற்றைய தினம் விசாரித்த யாழ்.மேல் நீதிமன்ற மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
Related posts:
யாழில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி
நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு...
பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!
|
|
யாழில் கறுப்பு கண்ணாடியின் பின்னிருந்து ஆசிரியைகளை துன்புறுத்தும் கல்விப்புல கறுப்பாடு யார்? - இலங்க...
பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள்...
அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...