குடாநாட்டில் சிறுபோகத்தில் 1900 ஹெக்டேயரில் வெங்காயச் செய்கை!

Friday, April 27th, 2018

குடாநாட்டில் இந்த ஆண்டின் சிறுபோகத்தின் போது 1900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கடும் வறட்சி வெப்பத்தினால் வெங்காயச் செய்கைக்கு உகந்த காலநிலை இல்லாத காரணத்தினால் கூடுதலாக வைகாசி மாதப் பிற்பகுதியிலேயே இந்த சிறுபோகச் செய்கைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்கென செய்கையாளர்கள் தமது விவசாய நிலங்களை உழுது பசளை போட்டும் தயார் படுத்தி வருகின்றனர்.

சிறுபோக செய்கைக்கு வெங்காய விதைகளுக்கு தட்டுப்பாடும் பற்றாக்குறையும் நிலவுவதால் கூடுதலாக விவசாயிகள் உண்மை விதைகள் மூலம் நாற்றுமேடை அமைத்து அதன் ஊடாக செய்கையில் ஈடுபடவும் உள்ளனர் என்று விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், அச்செழு, நவக்கிரி போன்ற இடங்களில் செய்கையாளர்கள் சிலர் வெங்காய செய்கையில் ஈடுபடவுள்ளனர்.

Related posts: