நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 31st, 2021

நாடு பூராக உள்ள பாடசாலைகளுக்கு 4 ஆயிரத்து 600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் –

நாடு பூராகவும் 4 ஆயிரத்து 600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. சரியான நடைமுறையில் இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் பாடசாலைகளுக்குள் இடம்பெறுகின்ற ஏற்றத்தாழ்வை குறைக்க வேண்டும் என்பதுடன் அரசியல் அழுத்தங்கள் மூலம் மாணவர்களை பாடசாலைக்குள் உள்வாங்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் பின்புலம் அல்லது வேறு அழுத்தங்களின் மூலம் எக்காரணம் கொண்டும் கல்வித்துறைக்கு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியிரந்த கல்வி அமைச்சர் கல்வித்துறையின் தரத்திற்காக சரியான வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: