ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாளை!
Wednesday, October 12th, 2016
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் விதவைகள், அநாதைகள், ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியர்களின் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஓய்வூதியத் திணைக்களத்தினரும் வருகை தரவுள்ளதால் பாதிப்பிற்குள்ளாகிய நிலையிலுள்ள விதவைகள், அநாதைகள், ஒய்வூதியர் அனைவரையும் தவறாது பங்குபற்றி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு கரைச்சி பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறை...
கடனை செலுத்த நிவாரண காலத்தை பெறுவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை!
பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளது – அனுதாபச் செய்தியில் இலங்கையின் அரச தலைவர்...
|
|