துமிந்த சில்வாவின் தீர்ப்பு குறித்து மீளாய்வு – அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு!

Wednesday, March 10th, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மீளாய்வு செய்யுமாறு அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்வு குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள ஆணைக்குழு யோசித ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடைக்கு எதிரான வழக்கையும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டிகேபி தசநாயக்கவிற்கு எதிராக வழக்கையும் கைவிடவேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: