ஒலிம்பிக் விளையாட்டு விழா: இலங்கை குழாம் பிரேஸில் பயணம்!

Tuesday, August 2nd, 2016

பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெறவுள்ள 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் இன்று (01) நாட்டிலிருந்து புறப்பட்டுச் ​சென்றது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைமையகத்தில் இடம்பெற்ற சர்வமத வழிபாடுகளின் பின்னர் வீர வீராங்கனைகள் பிரேஸில் நோக்கி பயணித்தனர்.ஒன்பது பேரடங்கிய இலங்கை குழாத்துக்கு மூன்று தடவைகள் மரதன் ஒட்டப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற அநுராத இந்திரஜித் குரே தலைமை தாங்குகின்றார்.

இதற்கு மேலதிகமாக மரதன் ஓட்ட வீராங்கனை திலகா ராஜசேகர,ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க,நீச்சல் வீராங்கனை மெத்தியூவ் அபேசிங்க மற்றும் கிமிகோ ரஹீம்,பளுதூக்கல் போட்டியில் சுதேஷ் பீரிஸ்,பட்மிண்டன் வீராங்கனை நிலூகா கருணாரத்ன,குறிபார்த்து சுடும் போட்டியில் மங்கள சமரகோன் மற்றும் ஜூடோ வீரர்கள் சாமர நுவன் தர்மரத்ன ஆகியோர் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

Related posts: