எயிட்ஸ் வதந்தியில் சிக்குண்ட சிறுவனுக்கு கொழும்பின் பரபல பாடசாலையில் அனுமதி!
Tuesday, March 8th, 2016
எயிட்ஸ் தொற்றுள்ளதாக வதந்தி பரவியதால் பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட சிறுவனுக்கு கொழும்பிலுள்ள ஆனந்த கல்லூரி அல்லது கண்டியிலுள்ள கிங்ஸ்வூட் கல்லூரியில் அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பிள்ளையை ஆனந்த கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கு அதன் அதிபர் முன்வந்துள்ள நிலையில் கல்வி அமைச்சுக்கு பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகளான கிங்ஸ்வூட் மற்றும் ரினிட்டி கல்லூரி ஆகியன குறித்த சிறுவனை தமது பாடசாலையில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இது குறித்து குடும்ப உறுப்பினர்கள் இதுவரை இறுதித் தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் ஏச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அவ்வாறான ஒரு தகவல் வெறுமனே ஒரு வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - அரசாங்க தகவல் திணைக்களம்!
யாழ். மாவட்ட நெல் செய்கையாளர்களுக்கு திரவ நனோ நைட்ரஜன் உரம் இன்றுமுதல் விநியோகம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும...
|
|
|
ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் - தேசிய சிறுவர் பாதுகாப்ப...
ஊழியர் நிதியத்தில் வரி அறவிடும் யோசனை பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது – அமைச்சர் நிமல் சிறிபா...
செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டம...


