உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்!
Friday, December 2nd, 2016சர்வதேச உள்நாட்டுப் போக்குவரத்து விதிகளுக்கு அமைய இலங்கையில் உள்நாட்டு விமானசேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ள வர்தகமாக உள்நாட்டு விமானசேவை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது அதற்கமைய இலங்கை விமானப் படையுடன் இணைந்து கூட்டு வர்த்தகம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக தகுதியான முதலீட்டார்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு போதுமான நிதி வழங்கக் கூடிய தனியார் நிறுவனங்களின் யோசனையைக் கோரும் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளர். அதற்கமைய வெகுவிரைவாக உள்நாட்டு விமானசேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க்படுகின்றது.
Related posts:
குடா நாட்டில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 8 மதுநிலையங்கள் - ஜே.வி.பி!
யாழ் ரத்ன விருது – 2018 க்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்!
பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளனர் - கொரோனா பரவல் தொடர்பில் ஜனாதிபதி குற்றச்சாட்டு...
|
|