கைத்தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்து!

Monday, July 3rd, 2023

கைத்தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கைத்தொழில் துறையானது ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒழுங்குமுறை சபை  அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தனியார் மருத்துவ நிறுவனங்களின் பதிவுச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து உரிய பதிவை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்யாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராகவும் ஒக்டோபர் மாதம் முதலாம்திகதி (01) வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஒழுங்குமுறை சபை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் பதிவு செய்யப்படாத சுமார் 1,500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: