உற்பத்தி காப்புறுதி இலவசம் – விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!
Monday, March 5th, 2018
சிறுபோகத்தில் இருந்து, விவசாயிகளுக்கு உற்பத்தி காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுகின்றன. நாட்டில் விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய வகையில், 2500 பேரைக் கொண்ட விவசாயப் பிரதிநிதி வலைப்பின்னல் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காப்புறுதி நடைமுறை குறித்து, விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள உற்பத்திகளுக்கு மேலதிகமாக, பாசிப்பயறு, எள்ளு, கௌபி உள்ளிட்ட, ஏனைய உற்பத்திகளுக்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்...
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு - லேடி ரிட்ஜ்வே குழந்தை நல மரு...
|
|
|
நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டு...
இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் - துணைவேந்தருக்கு சுகாதார சே...
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்...


