உரிமையாளர்கள் இல்லாவிடத்து அரசுடமையாக்கப்படும்!
Sunday, August 14th, 2016
உரிமை கோரப்படாத அல்லது உரிமையாளர்கள் இல்லாத காணிகள் மற்றும் பணம் என்பனவற்றை அரசுடமையாக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அண்மைக்காலமாக நடத்திய விசாரணைகளின் போது உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் பணம் பற்றிய தகவல்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளதால் உரிமை கோரப்படாத சொத்துக்கள், காணிகள், பணம் போன்றவற்றை அரசுடமையாக்குவதற்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்...
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த தீர்மானம்!
121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி - பொலிஸ் முகாமைத்துவப் பிரிவு தகவல்!
|
|