மலையகத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்!

Friday, March 11th, 2016

மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.  பத்தாண்டு திட்டத்தினை ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யுமாறு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த ஆலோசனைக்கு அமைய இத்திட்டம் ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்டு பிரதமர் முன்னிலையில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

Related posts: