உந்துருளியில் வந்த இரண்டு பேர் வங்கியொன்றில் கொள்ளை!

Wednesday, April 18th, 2018

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வங்கியில் உள்ள பணத்தினை உந்துருளியில் வந்த இரண்டு பேர் கொள்ளையிட்ட பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் கொள்ளையிட்ட பணம் இதுவரை மதிப்பிடப்படவில்லைஎனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் சந்தேக நபர்களை தேடி சீதுவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: