உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு 1000 பேர் வரை உயிரிப்பு – தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி தெரிவிப்பு!
Saturday, July 27th, 2024
உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உடலில் விஷம் கலந்ததன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் உடலில் கலந்த விஷம் என்னவென்பது தொடர்பில் அறியாததன் காரணமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே இதன் காரணமாக அவர்கள் உயிரிழப்பதாக விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஹம்பாந்தோட்டை துறைமுக கையளிப்பு தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் கனகரத்தினம் மாஸ்ரர் காலமானார்!
மேற்கூரை சூரியக்கல திட்டம் - அரச கட்டிடங்கள், மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி இம்மாதம் ...
|
|
|


