ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
Tuesday, October 3rd, 2023பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.
ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு சாடியுள்ளார்.
பிரித்தானியவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2800 குடும்பங்களுக்கு மீள்குடியேற தடை!
வருகிறது புதிய அனுமதிப்பத்திர முறை?
பெரும்போகம் - மன்னார் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை – மன்னார் மாவ...
|
|