இவ்வார இறுதிக்குள் தடை நீக்கம்?

Wednesday, April 20th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை நாளை மறுநாள் முதல் விலக்கிக்கொள்ள ஐரோப்பி ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக நேற்று மதியம் கடற்றொழில் அமைச்சு  தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சில மணித்தியாலத்தின் பிறகு அது விலக்கிக்கொள்ளப்படவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்றொழில் அமைச்சின் ஊடக இணைப்புச் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்று பிற்பகல் அமைச்சினால் முதலில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் , இலங்கை மீன் ஏற்றுமதி மீது சுமத்தப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 21ம் திகதி முதல் விலக்கிக்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்ட அந்த அமைச்சு, இலங்கை மீன் ஏற்றுமதி தடை தொடர்பாக நாளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடாத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

Related posts: