இலவச மொழி, கலை, கணனி வகுப்புக்களை ஆரம்பிக்கும் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்!

Monday, April 10th, 2017

பல்துறை சார்ந்த அறிவை மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்யும் நோக்குடன் யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச மொழி, கலை மற்றும் கணனி சார்ந்த விரைவில் இலவச வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கனடா விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் இதற்கான நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.

தரம்-01 முதல் 03 வரையான மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்றுக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் மொழிப்பாடங்களுக்கும், தரம்-01 முதல் 13 வரையான மாணவர்கள் கலைப் பாடங்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என மேற்படி சனசமூக நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழ். முன்னணி ஆசிரியர்களினால் போதனைகள், செய்முறைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் வசதிக்கேற்ப நேர அட்டவணை கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: