இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!
Friday, June 2nd, 2017சவுதியில் தொழில் தருனருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இலங்கைப் பணியாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.
பணிப்பெண்களாக சென்று சவுதியில் பணியாற்றும் இலங்கைப் பெண்கள், தொழில் தருனர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை அதிக அளவில் முன்வைக்கின்றனர். இவ்வாறு பல உண்மைக் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற போதும், சிலர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சவுதியில் 5 தொடக்கம் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சவுதியின் காவற்துறையினர் எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் தாக்கம் குறைவு!
மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி ...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு - உறவுகளை பல்வேறு...
|
|