இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மைதானம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Saturday, March 20th, 2021

வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் கிராமத்துக்கு கிரிக்கெட் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் ரவீன் விக்கிரமரட்ணவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட ‘மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் கிரிக்கெட் மைதானம்’ கிரிக்கெட் வீரர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான போதிய வசதிகள் இல்லாது சிரமப்பட்ட யாழ் மாவட்ட வளரும் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு, தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு தேசிய மைதானமொன்று இல்லாமல் இருந்தமை பெரும் குறையாகவே இருந்து வந்தது.எனினும், தற்போது அந்தக் குறையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நீக்கியுள்ளது.

யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தை, இம்மாவட்டத்திலுள்ள 26 கிரிக்கெட் சங்கங்களும், 16 பாடசாலை கிரிக்கெட் சங்கங்களும் தமது பாவனைக்கு உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: