இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.
கோவிட் தொற்று காரணமாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றையதினம் தனது வீட்டிற்கு சென்றிருந்தார்.
78 வயதான அவர் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளதுடன், வீரகேசரி, உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும் பணியாற்றி எழுத்து துறையிலும் தனது பங்களிப்பினை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் - அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட சந்திப்பு - இந்தியா பயணிக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரம சி...
|
|