இரு தினங்களில் சாதகமான பதில் இல்லையேல் மீண்டும் போராட்டம் – முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!
Saturday, December 3rd, 2016ஜனாதிபதி செயலகத்தில், மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, முச்சக்கரவண்டி சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இருந்தும் இந்த கலந்துரையாடலில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்துவரும் இரண்டு தினங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாகவும் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு வாரத்திற்குள் தீர்வு எட்டப்படாவிடின், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களையும் மறித்து தாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வற் வரி திருத்த விவாதம் இன்று இடம்பெறாது!
STF இற்கு புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்க நியமனம்!
வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் - ஜனாதிபதி ...
|
|