இரு தினங்களில் சாதகமான பதில் இல்லையேல் மீண்டும் போராட்டம் – முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!
Saturday, December 3rd, 2016
ஜனாதிபதி செயலகத்தில், மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, முச்சக்கரவண்டி சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இருந்தும் இந்த கலந்துரையாடலில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்துவரும் இரண்டு தினங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாகவும் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு வாரத்திற்குள் தீர்வு எட்டப்படாவிடின், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களையும் மறித்து தாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பம் கோரல்!
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!
போயதினத்திலும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம...
|
|
|
இலங்கை - ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ...
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...
தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – எதிர்க்கட்சியினருக்கு தேர்தலின் போது மக்கள்...


