இராணுவ வைத்திசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
Sunday, May 14th, 2017
சிங்கப்பூர் மகா கருண பௌத்த அமையம் ஒன்றினால் இராணுவ வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் ஒரு அங்கமாக சிங்கப்பூர் வாழ் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் குறித்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய நன்கொடையினை சிங்கப்பூரில் வசிக்கும் வணக்கத்துக்குரிய கலாநிதி கரவேடயன குணரத்ன தேரர் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் வைபவ ரீதியாக கையளித்தார்.
இந்த நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி,மகா கருண பௌத்த அமையத்தின் பிரதிநிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் - தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் -...
உயிரிழப்புகள் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் போது சரியா இறுதிப்படுத்தப்பட்டதாக இருப்பது அவசியமாகும் -...
நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!
|
|