சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச சார்பற்ற யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்திற்கும் மூன்று தினங்கள் விடுமுறை
Wednesday, April 13th, 2016சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்று (13), புதன்கிழமை நாளை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் , பணியாளர்கள் ஆகியோருக்கு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, குறிப்பிட்ட மூன்று தினங்களிலும் இந்த நிறுவனம் மூடப்பட்டிருக்குமென நிறுவனத் தலைவர் வைத்திய கலாநிதி திருமதி- ஜே.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் பணிகள் வழமை போன்று எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறு - கரு ஜயசூரிய தெரிவிப்பு!
இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரியுங்கள் - ஜெனீவாவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில...
|
|