இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் படுகாயம்!

Tuesday, September 15th, 2020

நுவரெலியா – நோர்வூட் , நிவ்வெளிகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு படுங்காயங்களுக்கு உள்ளாகிய 11பேரும் உடனடியாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் ஹற்றனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பொகவந்தலாவையிலிருந்து ஹற்றன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்தும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் சிக்கியவர்களில்  3பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: