எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானம்!
Friday, March 1st, 2024தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை இன்னமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பெண்களுக்கு உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்: யாழ். இந்தி...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் – நாளை இறுதி முடிவு எட்ட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம...
|
|