இயற்கை விஞ்ஞானங்கள் பீடத்தினால் விண்ணப்பம் கோரல்!

Friday, November 11th, 2016

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞானங்கள் பீடத்தினால் 2016/2017 ஆம் கல்வியாண்டிற்குரிய விஞ்ஞானமாணி பட்டக்கற்கை நெறி நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரி க.பொ.த.உயர்தரத்தில் கணிதம் அல்லது விஞ்ஞானப் பிரிவில் 3 பாடங்களில் சித்தியடைந்தவராகவோ அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் விஞ்ஞான அத்திவாரப் பாடநெறியில் சித்தியடைந்தவராகவோ இருத்தல் வேண்டும். இக்கற்கை நெறிக்கான விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் 06.11.2016 தொடக்கம் 07.12.2016வரை றறற.ழர.யஉ.டம என்றும் இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியுமெனவும் மேலதிக விபரங்களுக்கு யாழ்.பிராந்திய நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்.பிராந்திய உதவிப் பணிப்hளர் தெரிவித்தார்.

images-53

 

Related posts: