ஆறு மாதங்களில் 50 கைதிகள் தப்பி ஓட்டம்!

Friday, July 15th, 2016

வருடத்தின் அரையாண்டு காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

பாரிய குற்றங்களுடன் தொடர்புள்ள குற்றவாளிகளும் தப்பிச் சென்ற கைதிகளுள் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். தப்பிச் சென்ற கைதிகளுள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் அடங்குகின்றனர்.

அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related posts: